பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 

பட்டுக்கோட்டையில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

பட்டுக்கோட்டையில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராபர்ட் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில், காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இதில் பட்டுக்கோட்டை நகர், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர், அதிராம்பட்டினம் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பொதுமக்களில் நீண்ட நாள் பிரச்சனைகளான நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், கொடுக்கல் வாங்கல், நிலப் பிரச்சனைகள், சிறிய தகராறுகள் உள்ளிட்ட வழக்குகள் குறித்து இருதரப்பினரையும் அழைத்துப் பேசி தீர்வு காணப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு பெரும்பாலான மனுக்களுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், தனிப்பிரிவு காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story