பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைகேட்பு முகாம்

பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைகேட்பு முகாம்

குறைத்தீர் முகாம்

கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் நடைபெற்ற பொது விநியோக மக்கள் குறைகேட்பு முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சங்கராபுரத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் தனவேல் தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார். முகாமில் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம், பொறியாளர் அய்யனார் பங்கேற்றனர்.

Tags

Next Story