சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்று திறனாளிகளிடம் மனுக்கள் பெற்ற கலெக்டர்
சேலம்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை வாங்கினார். நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 341 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் பிருந்தாதேவி நேரில் சென்று மனுக்களை வாங்கினார். பின்னர் உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 16 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் எனவும் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தினார்.

Tags

Next Story