திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்
X

குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டா மாறுதல்,புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்வி கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 262 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Tags

Next Story