பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

குறைத்தீர் கூட்டம்

கள்ளகுறிச்சியில் மின்வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பிப்ரவரி மாதத்திற்கான பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நாளை 6ம் தேதி கள்ளக்குறிச்சி கோட்டத்தில் நடக்கிறது. தொடர்ந்து 13ம் தேதி திருக்கோவிலுார் கோட்டம், 20ம் தேதி சங்கராபுரம் கோட்டம், 27ம் தேதி உளுந்துார்பேட்டை கோட்டத்திலும் நடக்கிறது. அந்தந்த செயற்பொறியாளர் அலுவலங்களில் நடைபெறும் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்து பயன்பெறலாம், என மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story