மக்கள்குறைத்தீர் கூட்டம்

மக்கள்குறைத்தீர் கூட்டம்
மக்கள்குறைத்தீர் கூட்டம்
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் முகாமில் 644 மனுக்கள் பெறப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 644 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி. நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி. பயனாளி கோரிக்கை மனு அளித்ததை தொடர்ந்து, அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இன்றைய தினமே அப்பயனாளிக்கு தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார். தனித்துணை ஆட்சியர் (சபாதி)தனப்பிரியா, ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத்,பழங்குடியினர் நல அலுவலர் பி.எஸ்.கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story