திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம்

திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம்

மக்கள்்கள் குறைத்தீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 237 மனுக்கள் பெறப்பட்டன.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை ,ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன் ,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 237 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி குறித்த காலத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Tags

Next Story