"குளம் துார்வாரி சீரமைக்க சிறுபினாயூரினர் வலியுறுத்தல்"

குளம் துார்வாரி சீரமைக்க சிறுபினாயூரினர் வலியுறுத்தல்

குளத்தை துார்வார பொதுமக்கள் கோரிக்கை 

சிறுபினாயூரில் உள்ள குளத்தை துார்வாரி சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம்,சிறுபினாயூரில் ஊராட்சிக்கு சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பிலான பெருமாள் சாம்பன் குளம் உள்ளது. இந்த குளத்தையொட்டி ஒருபுறம் குடியிருப்பு பகுதியும், மற்றொருபுறம்விவசாய நிலங்களும் சூழ்ந்துள்ளன. இதனால், இக்குளம் இந்த பகுதியின் முக்கியநிலத்தடி நீராதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக இக்குளம்துார்வாரப்படாததால் அதன் ஆழப்பகுதி துார்ந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் குறைவான அளவு தண்ணீரே சேகரமாகிறது. பருவ மழைக்காலத்தில் போதுமான தண்ணீர் தேங்காததால், கோடைக்காலத்தில் குளம் விரைவாக வறண்டு போகிறது. கடந்த 2020ம் ஆண்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இந்த குளத்திற்கு படித்துறை மட்டும் அமைக்கப்பட்டது. துார்வாராமல் உள்ளது. எனவே, சிறுபினாயூர் கிராமத்தின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த பொதுக்குளத்தை துார்வாரி சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.

Tags

Next Story