பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் - பயணிகள் அவதி

பேருந்து நிலையத்தில்  பொதுக்கூட்டம் -  பயணிகள் அவதி

பொதுக்கூட்டம் 

திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களால், பல மணி நேரம் போக்குவரத்து முடங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

திருக்கழுக்குன்றத்தில், மாமல்லபுரம் சாலை மற்றும் செங்கல்பட்டு சாலை ஆகியவை இணையும்சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பை ஒட்டியே பேருந்து நிலையம்உள்ளது. மாமல்லபுரம், கல்பாக்கம், மதுராந்தகம், திருப்போரூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றன. இந்த நிலையத்தின் தெற்கு நுழைவாயில் பகுதி திறந்தவெளி இடமாக, பரந்த கான்கிரீட் தரைத்தளத்துடன் உள்ளது.

இவ்விடத்தை, அரசியல் கட்சி மற்றும் மற்ற அமைப்பினர் பொதுக்கூட்டம் நடத்த பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கூட்டம் நடத்தும்போது, பல மணி நேரம் நிலையத்திற்குள் பேருந்துகள் வருவது தடுக்கப்படுகிறது. இதனால், குறுகிய சாலையில் பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. பயணியரை இறக்குவதற்காக நிற்கும் போது, பிற வாகனங்கள் செல்ல முடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, போக்குவரத்து அதிகரிக்கும் மாலை நேரத்தில் தான், கூட்டத்தையும் நடத்தும் அவலம் அரங்கேறி வருகிறது. மேலும், மருத்துவ அவசரத்திற்கு கூட செல்ல முடியாமல், அப்பகுதி யினர் அவதிப்பட்டுவருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் தடை ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதை, நிரந்தரமாக தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story