செந்தாரப்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்

செந்தாரப்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்
அதிமுக பொதுக்கூட்டம் 
சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிவர இயங்கவில்லை என கூறி அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை எனக்கூறி அ. தி. மு. க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ரமேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநில பேச்சாளர் அமுதா கலந்து கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story