சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதற்கு சூரமங்கலம் பகுதி செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

சூரமங்கலம் 2-வது பகுதி செயலாளர் பாலு வரவேற்று பேசினார். அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., மாநகர பொருளாளர் பங்க் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், தலைமை கழக பேச்சாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அ.தி.மு.க. கொள்கை பரப்பு இணைச்செயலாளரும், நடிகையுமான விந்தியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழத்திற்கு தற்போது புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை. அதில் ஒரு கோடு கூட தி.மு.க.வால் போட முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்.

மக்கள் இழந்த சந்தோஷத்தை மீட்டு தருவோம். இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, மாநகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் தங்கராஜ், வர்த்தக அணி செயலாளர் ராம்ராஜ், பகுதி செயலாளர்கள் மாரியப்பன்,

யாதவமூர்த்தி, சண்முகம், சரவணன், முருகன், பிரகாஷ், கவுன்சிலர் ஜனார்த்தனன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story