திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ராமேஸ்வரம் லெட்சுமண தீர்த்தத்தில் நேற்று மாலை நகர் திமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். நகர் தலைவர் நாசர்கான் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பொதுக்கூட்டத்திற்கு கழக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.

அதற்கு முன்னதாக பிரதமர் மாஸ்க் அணிந்து அனைவருக்கும் வடை கொடுத்து தமிழக மக்களுக்கு மோடி அரசு வாயிலே சுட்ட வடை இதுதான் என நூதன முறையில் கூடியிருந்த பொதுமக்களிடையே மோடி சுட்ட வடை என்கிற பரப்புரை செய்தனர். தொடர்ந்து மேடையில் பேசிய கழக பேச்சாளர் சைதை சாதிக் திமுகவின் நிதிநிலை அறிக்கை குறித்து விளக்கி பேசினார். அதிமுக கட்சி என்பது கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் மாதிரி இப்ப அத யாரு வச்சுருக்கானு தெரியவில்லை என நகைச்சுவையுடன் பேசினார்.

மேலும் மோடி அரசு தமிழக மக்களை ஏமாற்றி வாக்கு பெற முயற்சி செய்கிறது. பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு ஜிஎஸ்டி விதித்த மோடி அரசு இது பெண்களுக்கான ஆட்சி என பொய் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் தமிழக முதலவர் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகையை கொடுத்து பெண்களின் தரத்தை உயர்த்திக் கொண்டு இருக்கிறார் என சிறப்புரை ஆற்றினார். இதில் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story