மதகுகளை சரிசெய்ய ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு

மதகுகளை சரிசெய்ய ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
மதகுகளை சரிசெய்ய ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
வெள்ளபுத்தூர் ஊராட்சியில் உள்ள மதகுகளை சரிசெய்ய ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இரண்டு ஏரிகள் உள்ளன. அதில் உள்ள நான்கு மதகுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை பொதுப்பணித்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சூழலில் 800 ஏக்கர் விவசாய நிலம் தண்ணீர் இல்லாமல் பாதிப்பு உள்ள ஆகிறது.

மூன்று ஆண்டுகளாக வெள்ளபுத்தூர் ஊராட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எனவே இது குறித்து இன்று ஜமாபந்தியில் ஜமாபந்தி அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.மதகை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் வரதன்,துணைத் தலைவர் விஜயகுமார்,வார்டு உறுப்பினர் ஜான் பாஷா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி தங்கவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய தயாநிதி கதிர்வாணன் ஆகியோர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்..

Tags

Next Story