வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்
 மனு அளிக்க வந்த  பொதுமக்கள்
ராஜபாளையம் அருகே 45 ஆண்டு காலமாக வீடு கட்டி வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி சுந்தரராஜபுரம் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சு சுந்தரராஜபுரம் கிராமத்தில் 1979 ஆம் ஆண்டு முதல் சுமார் 1.50 ஏக்கர் நிலத்தில் அப்பகுதியைச் சார்ந்த 150 குடும்பத்தினர் கட்டிடம் கட்டி வசித்து வருவதாகவும் ஊராட்சி வரிகளும் செலுத்தி வரும் நிலையில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் அவர்களுக்கு பட்டா வழங்க கூறி பகுதியைச் சார்ந்தோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Tags

Next Story