பொதுமக்கள் வாக்குபதிவு: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் வாக்குபதிவு: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் 

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச் சாவடி அலுவலரிடம் அளித்து தங்களது வாக்கினை செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச் சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்பிப்பதற்காக, மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச் சாவடி அலுவலரிடம் அளித்து தங்களது வாக்கினை செலுத்திக் கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,

தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை எண்(PAN Card) தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,பாராளுமன்ற /சட்டமன்ற/சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை. மேலும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்ற போது,

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள் எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை. மற்றொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை,

வாக்காளர் ஒருவர் அளிப்பாராயின், அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருக்குமாயின், அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளலாம். புகைப்படம் பொருந்தாததால் வாக்களரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாத நேர்வில், வாக்காளர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களைப் பொறுத்தவரை,

1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துச் சட்டத்தின் 20A-ஆம் பிரிவின் கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story