தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பொதுமக்களும் வசித்து வரும் பகுதியில் ஏராளமான நூற்பாலை தொழிற்சாலைகளும் உள்ளன . இந்நிலையில் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள், வெப்படை பகுதியில் நிற்காமல் சென்று வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்துவது பிறகு சிறிது நாளைக்கு பேருந்து நிற்பது மீண்டும் நிற்காமல் செல்வது என தொடர்கதையாக உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து வெப்படைக்கு செல்வதற்காக பயணி ஒருவர் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு தனியார் பேருந்தின் நடத்துனர் வெப்படையில் பேருந்து நிற்காது என கூறியுள்ளார். இதனை ஏற்காத பேருந்து பயணி வெப்படையில் உள்ள உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இரவு எட்டு முப்பது மணி அளவில் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி செல்வதற்காக வெப்படை அருகே வந்த பொழுது தனியார் பேருந்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . இதனை அடுத்து வெப்படை போலீசார் உடனடியாக சம்பவத்தை விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நீண்ட நாட்களாக தொடரும் இந்த பிரச்சனைக்கு போக்குவரத்து துறையும் காவல்துறையும் இணைந்து உரிய தீர்வை அளிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story