ஒக்கூரில் மக்கள் தொடர்பு முகாம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஒக்கூரில் மக்கள் தொடர்பு முகாம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே ஒக்கூரில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை மக்கள் எவ்வாறு பெறுவது என்பது குறித்து எடுத்துரைத்தனர். இதில் கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உட்பட அனைத்து துறை சார்பில் 143 பயனாளிகளுக்கு ரூபாய் 89,85,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சந்திரன், கோட்டாட்சியர் சுகிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story