மக்கள் தொடர்பு முகாம் கண்காட்சி

மக்கள் தொடர்பு முகாம் கண்காட்சி

கண்காட்சி 

ஊத்துக்குளி அருகே எடையார்பாளையத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், எடையர்பாளையம் கிராமத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார். உடன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, இணை இயக்குனர் மாரியப்பன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story