மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

காமராஜபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை நடைபெற உள்ளது.


காமராஜபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை நடைபெற உள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், மேகமலை வருவாய் கிராமம், உட்கடை காமராஜபுரம் கிராமத்தில் 13.03.2024 புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள்) நாளை நேரில் மனுவினைக் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story