கக்கனூரில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் - ஆட்சியர் தகவல்

கக்கனூரில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் - ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் பழனி 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா கக்கனூர் கிராமத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கக்கனூரில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். எனவே கிராம மக்கள், இம் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





Tags

Next Story