சாலையில் ஓடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதி

சாலையில் ஓடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதி

தென்காசி சாலையில் ஓடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.


தென்காசி சாலையில் ஓடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள. 33 வார்டுகளை கொண்ட நகராட்சிப் பகுதியின் முக்கிய சாலையான மேம்பாலம் நடு பல்க் 4 முக்கு பிரதான சாலையில் உள்ள வாறுகாலில் கழிவுநீர் செல்ல முடியாததால் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த சாலையில் செல்லக்கூடிய பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு கழிவுநீர்களை அப்புறப்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story