நீண்ட நேர மின்தடையால் பொது மக்கள் அவதி !

நீண்ட நேர மின்தடையால் பொது மக்கள் அவதி !

மின்தடை

இளையான்குடி பகுதியில் நீண்ட நேர மின்தடையால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மானாமதுரை,இளையான்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நீண்ட நேர மின்தடை ஏற்படுவதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 39 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 55 ஊராட்சிகளில் 200க்கு மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.

கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி ஏற்படும் மின்தடை நீண்ட நேரம் தொடர்வதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இப்பகுதியில் கோடை மழை பெய்து வரும் நேரத்தில் ஏற்படும் மின்தடை மழை நின்ற பிறகும் நீண்ட நேரம் தொடர்வதால் இரவு நேரங்களில் இருட்டில் கிராம மக்கள் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடியாக மின்தடையை சரி செய்வதற்கு போதுமான ஊழியர்கள் இல்லை என்ற காரணம் கூறுவதாக மக்கள் கூறுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராமப் பகுதிகளில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story