நுகர்வோர் விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியீடு

நுகர்வோர் விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியீடு

விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியீடு 

சேலத்தில் தேசிய நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது
சேலத்தில் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேசன் மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு பிரசுரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. குருஜி குருராஜா ஆன்மிக மாநாட்டில் இந்த விழிப்புணர்வு பிரசுரங்களை அமைப்பின் நிறுவனர் பூபதி, ஜோதிடர் பவானி ஆனந்த், சித்தரசு சுவாமி ஆகியோர் வெளியிட்டனர். இதில், பொதுச்செயலாளர் வெங்கடேசன் நிர்வாகிகள் வெங்கடேசன், சிவநேசன், முருகவேல், பாஸ்கரன் கலந்து கொண்டனர். முடிவில், இந்திய அரசின் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.

Tags

Next Story