ஊரக குடியிருப்பு திட்ட சந்தேகங்களுக்கு தொடர்பு எண் வெளியீடு

மத்திய அரசின் பாரத பிரமதர் ஊரக குடியிருப்பு திட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்ட சந்தேகங்களுக்கு வட்டார அளவில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டம் மத்திய அரசின் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டமானது 2016-17 முதல் 2021-22 வரை ((2020-21) நீங்கலாக) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளிகளுக்கு வீடு வழங்கியது. சரியாக பயனாளிகளுக்கு தவணைத் தொகைகள் விடுவிக்காமல் வேறு நபர்களுக்கு விடுவித்தது. வீடு கட்டாமல் தவணைத் தொகைகள் விடுவிக்கப்பட்டது,
ஒரே குடும்பத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கியது போன்ற முறைகேடுகள் குறித்தோ தவணைத் தொகைகள் விடுவிப்பதில் ஏற்படும் வங்கி கணக்கு தொடர்பான பிரச்சனைகள், பயனாளி இறப்பு காரணமாக சம்மந்தப்பட்ட வாரிசுதாரரின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை மாற்ற வேண்டியது போன்ற தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் ஏற்படும் சந்தேகங்களுக்கு கள்ளக்குறிச்சி வட்டார அளவில் 7402606426 கல்வராயன்மலை வட்டார அளவில் 7402606450 அளவில் அளவில் 7402606431 7402606441 அளவில் [email protected], தியாகதுருகம் வட்டார அளவில் 7402606340 7402606446 [email protected] தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளில் புகார் அளிக்கலாம் என பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
தாங்கள் அளித்த புகார்கள் வட்டார அளவில் [email protected], [email protected], சின்னசேலம் வட்டார [email protected], சங்கராபுரம் வட்டார [email protected], ரிஷிவந்தியம் வட்டார அளவில் 7402606436 [email protected], திருக்கோவிலூர் வட்டார [email protected], உளுந்தூர்பேட்டை வட்டார அளவில் 7402606361 [email protected], திருநாவலூர் வட்டார அளவில் 7402606356 தீர்க்கப்படவில்லை எனில் தொலைபேசி எண் 89255 04961 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] என்ற மாவட்ட அளவிலான தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தெரிவித்துள்ளார்.
