தேர்வு முடிவுகள் வெளியீடு 

தேர்வு முடிவுகள் வெளியீடு 

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியின் 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவத் தேர்வு (ஏப்ரல்– 2024) முடிவுகளை தேர்வு நெறியாளர் முனைவர் தெ.மலர்விழி வழங்கியதைத் தொடர்ந்து, மே.14 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர், துறைத்தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார். மேலும், இதன் விவரம் www.kngac.ac.in என்ற கல்லூரி இணையதளத்தில் மே.14 செவ்வாய்கிழமை அன்று மாலை வெளியிடப்பட்டது. மறு கூட்டல் மற்றும் ஒளிநகல் பிரதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூன்.06, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 08, மற்றும் உடனடித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன்.11 ஆகும். எனவே, இது தொடர்பாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் கல்லூரியின் தேர்வு நெறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story