மகப்பேறின் போது பெண் மருத்துவர் உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோகம்

மகப்பேறின் போது பெண் மருத்துவர் உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோகம்

மருத்துவர் அஞ்சுகா 

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சேவுகன் தெருவைச் சேர்ந்த மருத்துவர் ரா. அஞ்சுகா (34). இவர் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் கார்த்திக், பெங்களூருவில் மருத்துவராக உள்ளார்.கருவுற்றிருந்த அஞ்சுகாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.

அறுவைச் சிகிச்சையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த சில நிமிடங்களிலேயே அஞ்சுகாவின் நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவரை காப்பாற்ற போராடியும், அஞ்சுகா உயிரிழந்தார். பிறந்த குழந்தைகளுக்கும் 2 மூச்சுத்திணறல் இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அஞ்சுகாவின் தாயும் தந்தையும் கூலித் தொழிலாளர்கள். 5 பெண் குழந்தைகளுக்கு இடையே 4ஆவது பெண் குழந்தையாகப் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து மருத்துவரானவர்.தான் பணியாற்றிய அரசு மருத்துவமனையிலேயே மகப்பேறு அறுவைச் சிகிச்சையின்போது பெண்மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story