புதுகை அதிமுக சார்பில் சென்னை விரைந்த நிவாரண பொருட்கள்

புதுகை அதிமுக சார்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு தேவையான 18 வகையான உதவிப்பொருட்கள் முதல் கட்டமாக கண்டெய்னர் லாரியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் காய்கறிகள் துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டது தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் முன்னிலையில் கழக தொண்டர்கள் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர் அனைத்துப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் வண்டியில் இயற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டது. சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக சென்னையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது குடியிருப்பு பகுதிகளுக்குள் ஆறு நாட்கள் ஆகியும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் அரிசி காய்கறிகள் பெட்ஷீட் பாய் சேத்து புண்ணுக்கான மருந்து சோப்பு டெட்டால் உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் முதல் கட்டமாக 500 மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது கன்டெய்னர் லாரியில் 18 வகையான பொருட்கள் ஏற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடிய அசைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார் நாளை இரண்டாம் பத்தமாக ஆயிரம் நபர்களுக்கு பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நகராட்சி ஒன்றிய ஊராட்சி வட்ட கழக செயலாளர் பொறுப்பாளர்கள் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story