தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்!

மகளிர் தினத்தை தூய்மை பணியாளர்களை கவுரவித்த அமைச்சர் மெய்யநாதன்.

ஆலங்குடியில் நடைபெற்ற விழாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார் அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள கல்லுக்குண்டு குளத்தின் கரையில் அமைக்கப்பட்ட புதிய நடைபாதை மற்றும் பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதையை திறந்து வைத்தார்.

இதனை அடுத்து மேடையில் பேசிய அமைச்சர் மெய்யநாதன்,விழாவிற்கு வருகை தந்திருந்த பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு நாள்தோறும் பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பாடுபடும் தூய்மை பணியாளர்களையும் பாராட்டிப் பேசினார்.

இறுதியாக ஆலங்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் பெண்களுக்கு மகளிர் தினத்தை ஒட்டி பரிசு பொருட்களை வழங்கியதோடு அவர்களைப் பாராட்டி அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளையும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Tags

Next Story