ஏவிசிசி கல்வி குழும ஆண்டுவிழா கலைநிகழ்ச்சி!

புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்வி குழுமங்களின் 48 வது ஆண்டு நிறைவு விழா லேணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
புதுக்கோட்டை ஏவிசிசி கல்வி குழும ஆண்டுவிழா கலைநிகழ்ச்சியில் கருப்பசாமி வேடத்தில் ஆடிக்கொண்டிருந்த ஹரிஷ் என்ற ஐந்து வயது சிறுவனுக்கு திடீர் என அருள் வந்து கருப்பசாமியாகவே மாறி ஆக்ரோஷமாக ஆடியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சிறுவனின் இந்த செயல் கடவுள் நம்பிக்கை மறுப்பாளர்களை சிந்திக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்வி குழுமங்களின் 48 வது ஆண்டு நிறைவு விழா லேணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது .ஏவிசிசி கல்வி குழுமங்களின் தலைவரும் ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருமான ஏவிசிசி கணேசன் தலைமை வகித்தார்.பள்ளியின் தாளாளர் திருமதி மல்லிகா கணேசன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி முதல்வர் டாக்டர் புவனேஸ்வரி, வட்டார கல்விவள மேற்பார்வையாளர் பிரான்சி டயானா அரசு உயர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

Tags

Next Story