புதுக்கோட்டை : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

புதுக்கோட்டை : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

புதிய வரிவிதிப்பு ஆணைகளை வழங்கிய நகராட்சி தலைவர் 

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆணைகளை நகராட்சி தலைவர் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க நடைபெறும் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தில் புதிய வரிக்காக விண்ணப்பித்த பொதுமக்களின் மனுவினை ஆய்வு மேற்கொண்டு இன்று புதிய வரி விதிப்பு ஆணையினை நமது நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் வழங்கினார். இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர் சியாமளா, நகராட்சி அலுவலக வரி வசூலிப்பாளர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் தெரிவித்த நகராட்சி தலைவர் இது போன்று எண்ணற்ற பல விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர அனைத்து பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளார்கள் என தெரிவித்தார்.

Tags

Next Story