புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் கூட்டம்

புதுக்கோட்டையில் நகர்மன்ற உறுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது!

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 42 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த எஸ் ஏ எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான் பேசுவையில் புதுக்கோட்டை நகர் முழுவதும் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளன அதேபோல் சாலைகளில் மாடுகள் இரவு நேரத்தில் படுத்திருப்பதால் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது.

அதேபோல் தோரண வாய்க்கால்கள் முறையாக குப்பைகளை அகற்றாத காரணத்தினால் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கிது இதனால் டெங்கு சிக்கன் குனியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பொற்கால அடிப்படையில் செயல்பட்டு நோய் பரவால்லம் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர்திலகவதி செந்தில் விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். பின்னர் புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் இயற்றப்பட்டது.

Tags

Next Story