புதுக்கோட்டை : தங்க பத்திர சேமிப்பு திட்டம் அஞ்சலகம் அழைப்பு

புதுக்கோட்டை : தங்க பத்திர சேமிப்பு திட்டம் அஞ்சலகம் அழைப்பு

புதுக்கோட்டை தங்க பத்திர சேமிப்பு திட்டம் அஞ்சலகம் அழைப்பு

பொதுமக்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுள்ளனர்
புதுக்கோட்டை அஞ்சலகம் கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும் ரிசர்வ் வங்கியின் தங்க பத்திரத் திட்டம் இன்று முதல் 22ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு கிராமுக்கு ரூபாய் 6199 என்ற ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது. கூடுதலாக முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் உண்டு. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களையோ அல்லது 98 65 54 66 41 என்ற செல்போன் என்னையோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு ரூபாய் 2684 முதலீடு செய்தவர்கள் கடந்த நவம்பர் மாதம் ரூபாய் 6132 பெற்று பயனடைந்தனர். எனவே இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் கேட்டு கொண்டுள்ளார்.

Tags

Next Story