அறந்தாங்கியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

அறந்தாங்கியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

பேருந்துகள் வந்து செல்ல அவதிப்படுவதால் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்

அறந்தாங்கி -சென்னை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்காக தனி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் அறந்தாங்கியும் ஒன்று. இங்கு இருந்து தலைநகர் சென்னைக்கு தினமும் 4 அரசு விரைவு பஸ்க்கள், 10 தனியார் பஸ்க்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவுப் பஸ்களும் அண்ணாச்சிலை பகுதியில் இருந்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இந்த பஸ்கள் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சென்னை செல்லும் பஸ் களுக்காக நகரில் தனி பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story