புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு

புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு

தமிழ் கூடல் நிகழ்வு

புதுகோட்டை மாவட்டம்,புதுப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது.

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்கூடல் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கி. நிர்மலா தலைமை வகித்தார். மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பெரி. அழகம்மை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இலக்கிய சொற்பொழிவாற்றினர். நிகழ்வில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு,கவிதை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியர் சுதா நிகழ்வை ஒருங்கிணைத்தார் உதவி தலைமையாசிரியர் வனிதா, ஆசிரியர்கள் சர்மிளா இந்திரா காந்தி மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரியை கவிதா வரவேற்றார். தமிழாசிரியை பூமாதேவி நன்றி கூறினார்.

Tags

Next Story