வெள்ளக்கோவிலில் 12 டன் முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளக்கோவிலில் 12 டன் முருங்கைக்காய் கொள்முதல்

முருங்கைக்காய்

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 1 கிலோ செடி முருங்கை ரூ. 17 க்கும் மரம் முருங்கை ரூ.15 க்கும் கரும்பு முருங்கை ரூ30க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு 115 விவசாயிகள் முருங்கை காய்களை கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 12 டன் முருங்கை காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த முருங்கைக்காய் வாங்குவதற்கு முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், சின்னத்தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் வந்திருந்தனர் அவர்கள் ஒரு கிலோ செடி முருங்கை ரூ. 17 க்கும் மரம் முருங்கை ரூ.15 க்கும் கரும்பு முருங்கை ரூ30க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கை காய்களை வியாபாரிகள் மதுரை, கோவை, திண்டுக்கல், உள்ள உணவகங்கள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைப்பதாக வியாபாரி தெரிவித்தார்.

Tags

Next Story