வெள்ளகோவிலில் 2டன் முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்தில் நேற்று 2 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், சின்னாத்திபாளையம், மாந்தபுரம், பாப்பம்பாளையம், பெரியத்திபாளையம், மொளக்கவுண்டன் வலசு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளகோவில் கொள்முதல் நிலையம் செயல் பட்டது.

இந்த கொள்முதல் நிலையத்திற்கு 40 விவசாயிகள் முருங்கைக்காய் கொண்டு வந்திருந்தனர். இரண்டு டன் முருங்கைக்காய் வறத்து இருந்தது இந்த முருங்கை காய்களை வாங்குவதற்கு முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதியில் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஒரு கிலோ செடி முருங்கை ரூ 20-க்கும் மரம், உருண்டை ரூ. 15 க்கும், கரும்பு முருங்கை ரூ 30க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக்காய் இடை வெளியூர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவகங்களுக்கு அனுப்பி வைப்பதாக முருங்கைக்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story