கள்ளக்குறிச்சியில் ரூ.8 .50 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல்

கள்ளக்குறிச்சியில் ரூ.8 .50 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல்

பஞ்சு கொள்முதல் 

கள்ளக்குறிச்சியில் நடந்த சந்தையில் ரூ.8 .50 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று நடந்த சந்தையில் எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 375 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 5,500 ரூபாய்க்கும், அதிகபட்சம் 7,170 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 65 விவசாயிகள் கொண்டுவந்த 375 பஞ்சு மூட்டைகள், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் பஞ்சு உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story