சேலம் சுகவனேசுவரர் கோவிலில் புஷ்பாஞ்சலி

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் புஷ்பாஞ்சலி
X
பூக்களுடன் ஊர்வலம் சென்ற மக்கள்
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் புஷ்பாஞ்சலியை முன்னிட்டு 1 டன் பூக்களுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் சேலம் மட்டும் அல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், அனைத்து ஜீவராசிகளும் நலம்பெற வேண்டி சுகவனேசுவரர் கோவிலில் நேற்று புஷ்பாஞ்சலி நடந்தது. காலை 6 மணிக்கு 101 லிட்டர் பால் அபிஷேகமும், தொடர்ந்து சுகவனேசுவருக்கு ஒரு டன் பூக்களால் புஷ்பாஞ்சலியும் நடந்தது.

முன்னதாக கடைவீதியில் ராஜகணபதி கோவிலில் ஒரு டன் பூக்கள் மற்றும் சீர்வரிசை தட்டுகளை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடைகளில் பல வண்ண பூக்களையும், சீர்வரிசை தட்டுகளையும் கயிலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

மேலும், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பனி மலையில் சிவன், பார்வதி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்து முக்கிய வீதிகள் வழியாக சாமி ஊர்வலம் நடந்தது.

தொடர்ந்து சுகவனேசுவரருக்கு ஒரு டன் மலர்களால் புஷ்பாஞ்சலி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பிரதோஷ வழிபாடு நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story