பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்புக்கு காரணமான திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் சதீஷ் ,மதியழகன் ,குணா, கபிலன், சிவசூரியன் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன் ,பிரகாஷ் நகரச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story