அதிமுகவின் கோரிக்கையை ஏற்க வேண்டும்

அதிமுகவின் கோரிக்கையை ஏற்க வேண்டும்

கிருஷ்ணசாமி

நீட் தேர்வில் மோசமான நிலை உருவாகி உள்ளது என புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் 63 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் உண்மையை கண்டறிய அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கோரிக்கை சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் எனவும் அதிமுகவினர் சஸ்பென்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

முதல்வர் இந்த விஷயத்தில் கவலை கொண்டால் மட்டும் போதாது எனவும் நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.புதிய தமிழகம் கட்சி சார்பிலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே இதற்கு தீர்வாகும் எனவும் இது சம்பந்தமாக ஜீலை 6 ம் தேதி ஆலோசனை கூட்டம் தன் தலைமையில் கோவையில் நடைபெற உள்ளது என்றார்.

Tags

Next Story