சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிளுக்கான தேர்வு

சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிளுக்கான தேர்வு
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் வரும் ஜனவரி 19 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் நடைபெற உள்ளது இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள வீரர்,வீராங்கனைகள் பங்கேற்பதற்கான தமிழ்நாடு அணிக்கான வீரர்கள் தேர்வு போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது.

கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கோ கோ, வாலிபால் மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கு சென்னையில் 30.11.2023 முதல் 02.12.2023 வரை நடைபெற உள்ளது. கூடைப்பந்து தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜவர்ஹலால் நேரு உள் விளையாட்டரங்கில் மாணவிகளுக்கு 01.12.2023 மாணவர்களுக்கு 02.12.2023 அன்றும் கலந்து கொள்ளலாம்.

கால்பந்து தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மாணவிகளுக்கு 30.11.2023 மாணவர்களுக்கு 30.11.2023 01.12.2023 ஆகிய இரு தினங்களிலும் கலந்து கொள்ளலாம். கபடி தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கம் நேரு பார்க் சென்னையில் மாணவிகளுக்கு 30.11.2023 மாணவர்களுக்கு 01.12.2023 கலந்து கொள்ளலாம்.

கோ-கோ தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கம் நேரு பார்க் சென்னையில் மாணவிகளுக்கு 30.11.2023 மாணவர்களுக்கு 01.12.2023 கலந்து கொள்ளலாம். வாலிபால் தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் எம்.ஆர்.கே. ஹாக்கி விளையாட்டரங்கம் சென்னையில் மாணவிகளுக்கு 30.11.2023 அன்றும் மாணவர்களுக்கு 01.12.2023 அன்றும் கலந்து கொள்ளலாம்.

ஹாக்கி தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாணவிகளுக்கு 30.11.2023 அன்றும் மாணவர்களுக்கு 01.12.2023 அன்றும் கலந்து கொள்ளலாம். மேற்க்கண்ட அனைத்து தேர்வு போட்டிகளிலும் கலந்து கொள்ள சம்பந்தப்பட்ட இடங்களில் காலை 7 மணிக்கு வீரர்கள் இருக்க வேண்டும் எனவும். மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.

கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களுடன் ஆதார் அட்டை (அ) பாஸ்போட், பத்தாம் வகுப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (குறைந்தது 5 வருடங்களுக்கு முன்பு, மாநகராட்சி அல்லது கிராமபஞ்சாயத்து மூலம் ஜனவரி 01, 2023- அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டது) தேர்வுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு பயணப்படியோ, உணவுப்படியோ வழங்கப்பட மாட்டாது.

மேலும், விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்-04562 252947 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story