புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

சான்றிதழ் பெற்ற மாணவர்கள்

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடந்தது. போட்டியை மன்னர் கல்லூரி பேராசிரியர் கணேசன் நடத்தினார். மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

முதல் பரிசாக ரூபாய் 2000 ஆயிரத்தை மண விடுதி அரசுப்பள்ளி மாணவிகளும், இரண்டாம் பரிசாக ரூபாய் 1500 புதுக்கோட்டை வைரம் பள்ளி மாணவிகளும், மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 வல்லத்ரா கோட்டை அரசு பள்ளி மாணவர்களும் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டி ஏற்பாடுகளை அலுவலர் மன்ற நிர்வாகிகள் ராமசாமி, ரமேஷ் நடனம் காமாட்சி, மணிவண்ணன், அண்ணாமலை, பாண்டியன், அருள் ஆனந்த் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags

Next Story