குமாரபாளையம் அருகே முருக பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரை

குமாரபாளையம் அருகே முருக பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரை

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

குமாரபாளையம் அருகே முருக பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரை தொடங்கினர்.

. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம், வீரப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆண்டுதோறும் காவடி எடுத்தவாறு, பாதயாத்திரையாக சென்னிமலை, சிவன்மலை செல்வது வழக்கம்.

நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்தவாறும், காவடிகள் எடுத்தவாரும் ஊர்வலமாக வந்தனர். விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்தனர். காவடிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கினர். ஊர் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என 250க்கும் மேற்பட்டோர் காவடிகள் எடுத்தவாறுசென்னிமலை, சிவன்மலை புறப்பட்டனர்.

அரோகரா, என்ற சரண கோஷத்துடனும், முருகன் பக்தி பாடல்களை பாடியவாறும் பக்தர்கள் சென்றனர். ஆங்காங்கே பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தை மாதம் முழுதும் சென்னிமலை, சிவன்மலைக்கு காவடி எடுத்து சென்று வருவார்கள்.

Tags

Next Story