ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜாய்சி அன்னம்மாள் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் சந்திரமோகன், துணைத் தலைவர் எம்.எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், ஆசிரியர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கேப்டன் சதாசிவம், கோவை இன்ஜினியர் குகன் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ-மாணவிகளின் பல்வேறு இன்னிசை நடனங்கள், மாறு வேட போட்டிகள், தனிநபர் பேச்சுப்போட்டி, தமிழ் இலக்கணம், திருக்குறள் மற்றும் ஆங்கில இலக்கியம் ஒப்புவித்தல் ஆகியவை அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இறுதியில் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அசோகன், தர்மராஜன், கோபால், ராஜமாணிக்கம், தங்கராசு சுப்பிரமணி, பாண்டியன், சீனிவாசன், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story