திருமங்கலத்தில் ராதிகா சரத்குமார் பிரச்சாரம்

திருமங்கலத்தில் ராதிகா சரத்குமார் பிரச்சாரம்

திமுகவில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள் என பிரச்சாரத்தில் ராதிகா சரத்குமார் பேசினார்.


திமுகவில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள் என பிரச்சாரத்தில் ராதிகா சரத்குமார் பேசினார்.

திமுகவில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். -பிரச்சாரத்தில் ராதிகா சரத்குமார் பேச்சு நல்லா படி; தைரியமா இருக்கணும். -பிரச்சாரத்தின் போது சிறுமிக்கு அறிவுரை கூறிய ராதிகா. ராதிகா ரொம்ப நேரமா காத்திருக்கோம் நல்லா பேசு; டிவில பார்த்திருக்கோம், நல்லா அடி (பேசு) என்று ராதிகா சரத்குமாரிடம் கூறிய பெண். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட T.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராதிகா குறிப்பிடுகையில்: ஜல்ஜீவன் திட்டத்தில் உங்களுக்கு குடிநீர் கொண்டு வந்தார். புதிய சாலைகள் போடப்பட்டது திமுகவினர் போட்டாலும் அந்த பணத்தை கொடுத்தது மோடி ஐயா, அது டெல்லியில் இருந்து வந்த பணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். திமுகவினர் கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எனவே உங்களுக்கு பணம் கொடுத்து உங்களை ஏமாற்ற நினைப்பார்கள்.

இந்தியாவிலேயே பாஜக மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சி. திமுகவில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் யார் தலைவர் யார் பிரதமர் என்று அவர்களுக்கு தெரியாது. குரல் கொடுப்போம் என்கிறார்கள் ஆனால் நாங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம். தமிழ் மொழி, தமிழ் மண்ணுக்காக கொடுக்கிற பிரதமர் இருக்கிறார். நான் உங்கள் பிரதிநிதியாக ஆனால் நேரடியாக உங்களுக்கு வேண்டியதை செய்யச் சொல்வேன். இங்கு அதிகமாக மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது, இளைஞர்களுக்கு வேலையும் வேண்டும் என்பதால் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தை முடித்து சென்ற பிறகு அந்தப் பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சனை மற்றும் சாலை பிரச்சனைகள் குறித்து திடீரென பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story