விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் அதிமுக கூட்டணியில் விஜய பிரபாகரனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில். பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார், தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியை பொறுத்த வரை விருதுநகர் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. எனினும் சிட்டிங் எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர் இந்த முறையும் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிகவுக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்றும், இந்த தேர்தல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற எண்ணத்திலும் தேமுதிக விஜய பிரபாகரனை களமிறக்கி உள்ளது. இந்த சூழலில் அவரை எதிர்த்து ராதிகா சரத்குமாரை களமிறக்கி உள்ளது பாஜக. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

Tags

Next Story