தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆறுதல் கூறிய ராதிகா சரத்குமார்

தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆறுதல் கூறிய ராதிகா சரத்குமார்
பிரச்சாரத்திற்கு நடுவே தீ விபத்தில் சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு வீடு இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்*
விருதுநகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் நடிகை ராதிகா சரத்குமார் அய்யனார் காலணியில் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி யில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு அய்யனார் காலணியில் உள்ள குடிசை வீடுகள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சேதம் அடைந்தன. இந்த நிலையில் அந்தப் பகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டியிருந்தார். அப்போது தீ விபத்து குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை எடுத்து உடனடியாக பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி விபத்தில் சேதம் அடைந்த வீடுகளை ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் வீடுகளை இழந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்

Tags

Next Story