ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டன.

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் ஈரோடு சோலார் பகுதியில் அமைந்துள்ள அக்ஷயம் முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இல்லத்திற்கு தேவையான நலத்திட்டங்களும் உணவும் வழங்கப்பட்டன. பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு வேஷ்டி சேலை மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதிய உணவு, குழந்தைகள் இல்லத்திற்கு மதிய உணவு, மும்மத பிரார்த்தனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை சென்னிமலை முருகன் கோவிலில் தேர் வடம் பிடித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிசாமி , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் முத்துக்குமார், உள்ளிட்ட காங்கிரஸ் பெரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story