அலங்காநல்லூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

அலங்காநல்லூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

இனிப்பு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்

அலங்காநல்லூரில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி தலைமை தாங்கினர். அமைப்பு சாரா மாவட்ட தலைவர் சோனைமுத்து, மனித உரிமை மாவட்ட தலைவர் சரந்தாங்கி முத்து, மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, நகர் தலைவர்கள் வைரமணி, சசிகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சந்திரசேகர், மலைக்கனி, திரவியம், கண்ணுசாமி, கவுன்சிலர் தனலட்சுமி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story