ராகுல்காந்தி பிறந்தநாள் விழா; ரத்ததான முகாம்

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா; ரத்ததான முகாம்

எம்.பி., ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிறப்பு வழிபாடு, ரத்த தானம் முகாம் நடந்தது.

எம்.பி., ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிறப்பு வழிபாடு, ரத்த தானம் முகாம் நடந்தது.

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்.பி. யின் பிறந்தநாளையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு, ரத்த தானம் போன்ற நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

திருவானைக்கா, ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, நத்தா்ஷா பள்ளிவாசல், மேலப்புதூா் தூய மரியன்னை பேராலயம், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடத்தி, இனிப்பு வழங்கப்பட்டது. திருச்சியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ரத்த தான முகாமை மாநகா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ் தலைமையில் ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்கள் தொடங்கி வைத்தனா். அப்போது திரளான காங்கிரஸாா் ரத்த தானம் வழங்கினா். விழாவில் திருச்சி மாநகர மேயா் அன்பழகன், திமுக மத்திய மாவட்டச் செயலா் வைரமணி,காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் கோவிந்தராஜ், கலை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் சுப சோமு, முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெரோம் ஆரோக்கியராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story